செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மறக்குமோ மறக்குமோ மாவீரா | பா.உதயன்

மறக்குமோ மறக்குமோ மாவீரா | பா.உதயன்

1 minutes read

மறக்குமோ மறக்குமோ மாவீரா
மண்ணில் கிடக்குதே உந்தன் மாவீரம்
ஆயிரம் ஆயிரம் உங்களின் வீரம்
அதனுள்ளே கிடக்குதே எங்கள் வீரா

நடந்த உன் பாதங்கள் தெரிகிறதே
நீ சுமந்த வலி அங்கு கிடக்கிறதே
எத்தனை துன்பங்கள் நீ சுமந்தாய்
எங்களுக்காகவே உயிர் எறிந்தாய்

கனவுகள் சுமந்து சென்றோரே
உங்கள் நினைவுகள் மறந்தோமோ
உயிரினை எறிந்து போனோரே
உறவுகள் உம்மை பிரியோமே

கவிதையாய் கடலில் நிமிந்தாரே
கண்களில் பூவாய் பூத்தாரே
எங்கள் கண்களின் தூரம் போகும் வரை
உங்களுக்காக நாம் பார்த்திருபோம்

காற்றோடு வந்து பேசுறீர்கள்
எங்கள் கனவோடு வந்து போகிறீர்கள்
நேற்றைய பொழுதினில் உன் நினைவை
பார்த்திட கண்கள் தேடுதடா

மறக்குமோ மறக்குமோ மாவீர
மண்ணில் கிடக்குதே உந்தன் மாவீரம்
நினைக்கிறோம் உந்தன் நினைவுகளை
ஒரு தரம் உங்கள் முகம் பார்க்க

மறக்குமோ மறக்குமோ மாவீர
மண்ணில் கிடக்குதே உந்தன் மாவீரம்
உங்கள் கல்லறை கதவினை திறந்து வை
மெல்ல உன் குரலினை கேட்கின்றோம்.

பா.உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More