செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நிரந்தர மனிதன் | வசந்ததீபன்

நிரந்தர மனிதன் | வசந்ததீபன்

0 minutes read


முங்கியும் முங்காமலும்
தலை அமுங்க
இரத்தக் குளத்தில்
மல்லாந்து கிடக்கும் அவன்
மேகம் கசிய
நீர் சிதற்றும் வானம்
ஈரக்காற்று கனியவைப்பது
இயற்கையை மட்டுமா..?
ஏன் இளக்கவில்லை..?
மனிதர்களை…
மெளன சாட்சிகள் விழித்திருக்கும்
அத்துவான சூழல்
பசியாலும் பட்டினியாலும்
களைத்துக் கசங்கித் தளராத அவனை
பிடித்தமுக்கி
கத்தியால் சல்லடை செய்தனர்
எச்சில் சோற்றில்
தழைத்து எக்காளமிடும் அவர்கள்…
முளைத்தெழும் விதையாய்
கம்பீரமும் உறுதியும் ததும்ப
போராடிய வாழ்க்கை
அவன் முகத்தில் ஒளிர்ந்தது.

🦀
வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More