புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அனாமிகா: செல்லமகளின் நினைவுகள் | பாலசுகுமார்

அனாமிகா: செல்லமகளின் நினைவுகள் | பாலசுகுமார்

0 minutes read

இன்று
என் உயிர்
உடைந்து போன நாள்
நினைந்து நினைந்து
நெடுக நெடுக
அவளோடு இரு
என்று என்னை
என் மனம்
கட்டளையிட்ட நாளும்
இதுதான்

உன்னுள் இருக்கிறாள்
உன்னை இயக்குகிறாள்
எல்லா செயல்களும்
அவளிலிருந்துதான்
உருக் கொள்கின்றன
என மீண்டும் மீண்டுமாய்
உந்தித் தள்ளி
உயிர்ப்பிக்கும்
நாளும் இதுதான்

அனாமியோடு
சுனாமி இணைந்த நாள்
அகிலம் புரண்ட நாள்
அவலத்தை அலைகள்
சுவைத்த நாள்
மனிதம் ஒன்றுதான்
மகத்தானது
மற்றவை எல்லாம்
வெறும் புளுகும்
புனைவும் என புத்தி உறைக்க
சொன்ன நாளும் இதுதான்..

–+++++—

தீர்த்தக் கரையினிலே
உன் உடலம்
சோர்ந்து கிடக்கையிலே
தூக்கியெடுத்து
மடியில் மனம் பதைக்க
மார்பில் அணைக்கையிலே
நான் மாண்டு போனேனடி
என் செல்ல மகள் கண்ணே

ஒரு தரம் கண் திறந்து
உயிர் கொண்டு வருவாயா
அலறித் துடித்து
ஏங்கித் தவித்து
உன் இரு விழி மூடிய நாள்
கரு விழிகள் காட்டிய
அத்தனை மொழிகளும்
அடங்கிப் போன நாள்
ஆனாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்பாய் என்னுள்.

பாலசுகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More