அன்னையர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் அன்னையர் தினத்தை வெகுவாக கொண்டாடினர். நடிகர் விஷால் தனது தங்கை ஐஸ்வர்யாவுடன் சென்னை கீழ்ப்பாக்கம் சர்ச்சில் அமைந்துள்ள மெர்சி ஹோமில் உள்ள 200 முதியவர்களுக்கு உணவு, மற்றும் துணிமணிகள் வழங்கி அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
விஷாலையும், அவரது தங்கை ஐஸ்வர்யாவையும் முதியோர் இல்லத்தில் இருந்தவர்கள் அனைவரும் அன்போடு வாழ்த்தினர். விஷால், தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘பாயும் புலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுமட்டுமில்லாமல், மேலும் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.