செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலை பிற்போடுவது மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பதாகும் | சம்பிக்க ரணவக்க

தேர்தலை பிற்போடுவது மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பதாகும் | சம்பிக்க ரணவக்க

1 minutes read

பல்வேறு உபாயங்களை  திட்டமிட்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பது போலாகும் என 43ஆவது படையணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள 43ஆவது படையணி அலுவலகத்தில் நேற்று (பெப் 16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தலை பிற்போவதற்கு 21 தடவைகள் முயற்சித்த அரசாங்கம், 22ஆவது தடவையில் நிதி அமைச்சின் செயலாளரையும் அச்சக பிரதானியையும் பயன்படுத்திக்கொண்டு பணம் வழங்காமல் தேர்தலை பிற்போவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிகவும் பயங்கரமான செயற்பாட்டுக்கு வழி அமைக்கும். தேர்தலை பிற்போடுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் மக்களின் இறையாண்மைக்கு  விடுக்கப்படும் மரண அடியாகும்.

பயங்கரவாத அச்சுறுத்தல் காலத்தில். சுனாமியால் பல மாதங்களுக்கு பிறகு மற்றும் கொரோனா தொற்று நிலைமையில் இந்த நாட்டில் தேர்தல் இடம்பெற்றது. நிறைவேற்று அதிகாரியின் தீர்மானத்தின் பிரகாரம் தேர்தல் நடத்தாமல் இருந்த சந்தர்ப்பங்களில் நாடு, இல்லாத வன்முறைக்கு பயணித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையிலும் பணம் இல்லையென்றோ அல்லது வேறு காரணங்களை காட்டி தேர்தலை பிற்போட்டால் நிச்சயமாக மக்கள் போராட்டம் ஒன்று ஏற்படும். இதனால் இப்போது இடம்பெறுவது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியை விரட்டியடித்ததைப்போன்ற செயற்பாடுக்கு கை அசைப்பதாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More