செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக்க பொதுஜன பெரமுன உதவி கோரியது

மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக்க பொதுஜன பெரமுன உதவி கோரியது

1 minutes read

 மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவு கோரியதாக  சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 

அரசாங்கமே வீடு செல்ல வேண்டும், அதனை விடுத்து பிரதரை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என சன்ன ஜயசுமன குறிப்பிட்டார். 

சுதந்திர மக்கள் கூட்டணியின் எந்தவொரு உறுப்பினரும் பிரதமரை மாற்றும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருப்பதே மஹிந்த ராஜபக்ஸவிற்கு தற்போதைக்கு சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More