செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பொன்னியின் செல்வன் 2′ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

பொன்னியின் செல்வன் 2′ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?

1 minutes read

உலக தமிழர்களிடையே பேசு பொருளாக உருவாகி இருக்கும் மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன் 2’, அதன் முதல் பாகத்தை போல் மனநிறைவை அளிக்குமா..? அல்லது கொமர்ஷல் அம்சங்களால் வழக்கமான படைப்பாக இருக்குமா..? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இலங்கை தொடர்பான காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. குறிப்பாக சிங்கள தேசம் என்ற சொல்லாடல். மேலும் ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னனை கொலை செய்யும் இடமும், பின்னணியும் தவறு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படைப்பாளியான மணிரத்னமோ.. ‘நாவலை முழுமையாக படமாக்க இயலாது என்றும், நாவல் எடுத்துரைக்கும் விடயங்களை எம்முடைய படைப்பு சுதந்திரத்துடன் இணைத்துதான் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ‘பொன்னின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே…’ எனத் தொடங்கும் பாடலின் ஒரு நிமிட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் வாலிப வயதில் இருக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் இடையேயான காதலை சொல்வது போல் இருப்பதால்… பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுத, பின்னணி பாடகர் ஹரி சரண் தன் காந்த குரலால் பாடியிருக்கிறார். ‘இசை புயல்’ ஏ. ஆர். ரகுமானின் இசையில் உருவான இந்த பாடல் இளைய தலைமுறையின் ஃபேவரைட் ட்யூனாக மாறி இருக்கிறது.

இதனிடையே லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் இருபத்தி எட்டாம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More