நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச் செயலா் துரைமுருகன், இன்று ஆரம்பித்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சாா்பில் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், பெற்றோா், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர்.