செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல்கலைக்கழக விடுதிகள் இரவு நேரங்களில் கண்காணிக்கப்படும்

பல்கலைக்கழக விடுதிகள் இரவு நேரங்களில் கண்காணிக்கப்படும்

0 minutes read

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் இரவில் சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகிடிவதை செயல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விடுதிகளில்  இந்த சோதனைகளை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை  076 54 53 454 என்ற வாட்ஸ்அப் இலக்கம் மூலம் தெரிவிக்குமாறும் தற்போது அதிகளவிலான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More