இந்தியாவின் மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் குடி நீர் அருந்திய 93 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
நந்தட் மாவட்டத்தில் முகுவான்தாண்டா என்ற கிராமத்தில் சுமார் 500 பேர் வசிக்கின்றனர்.
அங்குள்ள ஒரு கிணற்றில் இருந்து வந்த நீரை அப்பகுதியினர் பருகி வந்தனர்.
இந்தநிலையில் பலர் திடீரென வயிற்றுவலி, வாந்திபேதி என பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, 93 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தில் பலர் பாதிக்கப்பட்டதால் சுகாதார துறையினர் அங்கு மாற்று குடிநீரை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.