புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இரா.சம்பந்தன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

இரா.சம்பந்தன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

0 minutes read

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா. சம்பந்தன் மறைவுக்கு இந்திள பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரா. சம்பந்தன், ஞாயிற்று கிழமை இரவு 11 மணியளவில் காலமானார்.

இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், இரங்கல் தெரிவித்து உள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவருடனான சந்திப்புகளில் இனிமையான தருணங்கள் எப்போதும் நினைவு கூறப்படும். அவர் இலங்கையில் வாழும் தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவைக்காக தொடர்ந்து பாடுபட்டார்” எனப் பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More