செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விவரங்களை வழங்குங்கள்! – பொதுமக்களிடம் திலகநாதன் எம்.பி. கோரிக்கை

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விவரங்களை வழங்குங்கள்! – பொதுமக்களிடம் திலகநாதன் எம்.பி. கோரிக்கை

1 minutes read
இராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விவரங்களை எம்மிடம் ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களிடம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் இராணுவத்தினர் தமது தேவைக்காக வன்னிப் பிரதேசத்தில் கையகப்படுத்திய பிரதேசங்களைப் படிப்படியாக எமது அரசு  விடுவித்து வருகின்றது. கடந்த காலங்களிலும் இவ்வாறான காணிகளை எமது அரசு விடுவித்து இருந்தது.

கடந்த வாரமும் இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விவரங்களைச் சேகரித்து இருந்தது. எனவே, அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட இடங்கள் இருக்குமாக இருந்தால் அது தொடர்பான விபரங்களை எமக்கு தந்து உதவுமாறு பொதுமக்களைக்  கேட்டுக்கொள்கின்றோம்.

அவ்வாறான இடங்களை மிக விரைவில் விடுவித்து மக்களுடைய பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More