செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா தோல்வி அடைய ஜெர்சி நிறமே காரணம்!

இந்தியா தோல்வி அடைய ஜெர்சி நிறமே காரணம்!

1 minutes read

உலக கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைய ஜெர்சியின் நிறம்தான் காரணம் என மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து தலைவர் இயன் மோர்கன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். 338 ஓட்டங்கள் எடுத்தால், இந்தியா வெற்றி பெறும் என்ற இலக்கினை இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.

இறுதியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, இந்திய அணி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள்.

ஆனால், இந்திய அணி உலக கிண்ணத்தில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சிதான்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த டுவிட்டிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More