முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி யசந்த கோதாகொட நேற்று மாலை இது குறித்த தீர்ப்பை அறிவித்திருந்தார்.இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றியினை கொண்டாடும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்வில் தமிழர் தரப்பிலிருந்து கோத்தபாய, மகிந்த கூட்டணியுடன் இணைந்து நிற்கும், ஈபிடியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டு கைதட்டி மகிழ்ந்துள்ளார்.