அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் தொடர்ச்சியாக கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஐரோப்பாவின் வட பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சியாரா புயல் காரணமாக வார இறுதி நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மணித்தியாலத்திற்கு 145 கிலோமீற்றர் வேகத்தில் சியாரா புயல் தென்கிழக்கு நோக்கி நகரும் என அந்நாட்டு வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.
அயர்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.