தெலுங்கு சினிமாவில் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கான படங்களை கைப்பற்றி அடிக்கடி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தவர் காஜல்அகர்வால். அதையடுத்து, பதிலடியை காஜலுக்கு கொடுக்க அவர்கள் இருவரும் நேரம் பார்த்து வந்தபோது அதற்கு வாய்ப்பு கொடுக்காத வகையில், இந்தி, தமிழ் என் எஸ்கேப்பாகிக் கொண்டிருந்தார் காஜல். ஆனால் அவர்கள் கொடுக்கத் தவறிய காஜலுக்கு இப்போது நயன்தாரா கொடுத்துள்ளார்.
அதாவது, விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்து வந்தபோது, உதயநிதி நடிக்கயிருந்த நண்பேன்டா படத்தில் காஜலைத்தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். அதனால் விரைவில் தனக்கு அவர்களிடமிருந்து முறையான அழைப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தார் காஜல். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, அதே படத்தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை சற்றும் எதிர்பார்க்காத காஜல், அதிர்ச்சியில் நொறுங்கிப்போனாராம். அதனால் இதுவரை தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளை மட்டுமே தனக்கு போட்டியாக கருதி வந்த காஜல், இப்போது நயன்தாராவையும் தனது போட்டி நடிகை பட்டியலில் சேர்த்திருக்கிறாராம்.
மேலும், எனக்கு அவர் கொடுத்ததை விட மிகப்பெரிய அதிர்ச்சியை சீக்கிரமே அவருக்கு கொடுக்கப்போகின்றேன் என்று சொல்லி அனல் பறக்கும் ஆவேசத்தை வெளிப்படுத்துகிறாராம் காஜல்.