ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை MARINE DRIVE காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.அவர் தனது ஆண் நண்பருடன் எந்தவித காரணமுமின்றி ஊருக்குள் சுற்றி தெரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பூனம் பாண்டே பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.சட்டத்தை மதிக்காதது, நோய் தொற்று பரவுவதற்கு காரணமாகும் வகையில் பொறுப்பில்லாமல் இருந்தது என்று பல்வேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் நிர்வாணமாக காட்சி அளிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே அவ்வப்போது சமூக ஊடகங்களில் அதிரடியான படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும் நான் வீட்டில் பத்திரமாக இருக்கிறேன் என்றும் நேற்று மட்டும் 3 திரைப்படம் பார்த்ததாகவும் பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆண் நண்பருடன் MARINE DRIVE-வில் சுற்றிய வீடியோ அவருக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.