பிரித்தானியாவின் தேசிய பத்திரிகையான தி இண்டிபெண்டன்ட் இதழின் ஆசிரியராக ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இந்தியர் குறிப்பாக 29 வயது நிரம்பியவர் இப் பதவிக்கு நியமிக்கப்படுள்ளமை அமெல் ராஜன் உடைய திறமையைக்காட்டுகின்றது.
ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தில் கடமையாற்றிய போதிலும் அவருக்கு இப் பொறுப்பு வழங்கப்பட்டமை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்போது ஒரு முக்கியமான துறைக்கு ஆசிரியராக கடமையாற்றுன்கிறார்.