சுவிட்ஸர்லாந்து காயமடைந்த மாடு ஒன்று ஹெலிகொப்டரின் மூலம் உயரமான பகுதியிலிருந்து எல்ப்ஸ் மலையின் தாழ்வான பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொடென்பர்ட் என்ற நிகழ்வுக்காக எல்பின் பிரதேச விசாயிகள் ஒவ்வொரு வருடமும் தங்களது மாடுகளை உயர்வான பகுதிகளிலுள்ள எல்பஸ் தாழ்நிலப்பகுதிக்கு மாடுகளை ஓட்டிச்செல்கின்றனர்.
அவ்வாறே, சுவிட்ஸர்லாந்தின் க்ளவுசென்பாஸ் மலைப்பகுதியிலிருந்து 1000 மாடுகளை தாழ்நிலப்பகுதிக்கு ஓட்டிச்சென்றனர்.
எனினும், ஒரு மாடு சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்ததால் அது ஹெலிகொப்டரின் மூலம் தாழ்நிலப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
மாடுகளை கொண்டுசெல்வதற்கு இது இலகுவான வழி என்று திடீரென விலங்கு வானில் தூக்கிச் செல்லபடுவதால் அதற்கு இது அதிர்ச்சியாக இருக்கும் என இந்த மாடுகளை ஓட்டிச் செல்லும் விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளர்.
இவ்வாறு கொண்டுசெல்லப்படுவதால் விலங்குகள் மேலும் காயமடைவது தவிர்க்கப்படுகிறது.
அத்துடன் காயமடைந்த பசுக்களை கொண்டுசெல்ல சுவிட்ஸர்லாந்தில் பொதுவாக இந்த முறைமை கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.