2
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுலராஜா, உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட பிரதேசபை உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தீபங்கள் ஏற்றி வணங்கினர்.