செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பாடலுக்கான நடனம் ஆடும் பொறுப்பையும் டி.ராஜேந்தரே ஏற்றிருக்கிறார் | “விழித்திரு”பாடலுக்கான நடனம் ஆடும் பொறுப்பையும் டி.ராஜேந்தரே ஏற்றிருக்கிறார் | “விழித்திரு”

பாடலுக்கான நடனம் ஆடும் பொறுப்பையும் டி.ராஜேந்தரே ஏற்றிருக்கிறார் | “விழித்திரு”பாடலுக்கான நடனம் ஆடும் பொறுப்பையும் டி.ராஜேந்தரே ஏற்றிருக்கிறார் | “விழித்திரு”

1 minutes read

அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவனின் இரண்டாவது படம், விழித்திரு.

இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, அபிநயா, தன்ஷிகா, தம்பி ராமையா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பேபி சாரா நடித்துள்ளார். சத்யன் இசையமைத்திருக்கிறார். ஓர் இரவில் நடக்கும் கதைதான் விழித்திரு. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்ததோடு பின்னணியும் பாடியிருக்கிறார். இப்போது அந்தப் பாடலுக்கான நடனம் ஆடும் பொறுப்பையும் டி.ராஜேந்தரே ஏற்றிருக்கிறார்.

மேலும் பாடலில் இவருடன், பிரபல மும்பை கவர்ச்சி நடிகை சனாசூரி மற்றும் சலீம் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த அஸ்மிதா ஆகிய இருவரும் இணைந்து கவர்ச்சி குத்தாட்டம் போடுகிறார்களாம். அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தறியாடி என்ற பாடலில் இருக்கும் முழு எனர்ஜியை துளியும் குறைவில்லாத வகையில் விழித்திரு படப் பாடலிலும் கொண்டுவர தயாராகிக் கொண்டிருக்கிறாராம் டி.ராஜேந்தர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More