செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கர்ணன் படம் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் எதிரானதா? எழும் சலசலப்பு

கர்ணன் படம் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் எதிரானதா? எழும் சலசலப்பு

2 minutes read

தனுஷ் நடித்து அண்மையில் வெளியான கர்ணன் படம் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் எதிரான படம் என அக் கட்சி ஆதரவாளர்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அசுரன் படத்தை ஏண்டா பார்த்து தொலைந்தோம் என்று ஸ்டாலின் நிச்சம் நொந்து கொண்டிருப்பார். அந்த அளவுக்கு அவரை விழிபிதுங்க வைத்துவிட்டது முரசொலி மூலப்பத்திர விவகாரம். அசுரன் படத்தில் பஞ்சமி விவகாரம் பற்றி பேசியதை பாராட்டப்போக, பிடித்துக்கொண்டார் ராமதாஸ். முரசொலி பத்திரிகை கட்டிடமே பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்றார். இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்று அவசர அவசரமாக பட்டாவை காட்டியது திமுக. பட்டா இருக்கட்டும்.. மூலப்பத்திரம் எங்கே? என்று பிடித்துக்கொண்டார் ராமதாஸ்.

1960ல் வாங்கப்பட்ட முரசொலி இடத்தின் ஆவணங்களை விட்டுவிட்டு, 20 ஆண்டுகளுக்கு பின்னர் வாங்கிய பட்டாவை இணைப்பு ஏன்? மூலப்பத்திரம் என்னாச்சு? என்று கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.

பாமகவை அடுத்து பாஜகவினர் இதை வசமாக பிடித்துக்கொண்டனர். முரசொலி நில பஞ்சை நிலத்தில் தான் அமைந்திருக்கிறது என்பதை வைகோவே முன்னர் சொன்னதை பொன்.ராதாகிருஷ்ணனும், எச்.ராஜாவும் கூறினர்.

பஞ்சமி நிலத்தை அபகரித்துதான் முரசொலி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு, பத்திரம் இருக்குது என்று சொன்ன ஸ்டாலினிடம், அப்படியானால் மூலப்பத்திரம் எங்கே? என்ற கேள்விக்கு இன்று வரைக்கும் பதில் இல்லை. அதனால்தான், மூலப்பத்திரம் எங்கே? அதிமுக கூட்டணி கட்சிகள் திமுகவை தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கின்றன.

நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்திலும் இந்த விவகாரம் எதிரொளித்தது. கோவையிலும் மேடையில் பேனர் வைத்து பிரச்சாரம் செய்தனர் பாமகவினர். தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை அபகரித்து, முரசொலி அலுவலகம் கட்டியதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சியே திமுக என்று இப்பிரச்சார கூட்டத்தில் முழக்கம் எழுப்பினர்.

இந்நிலையில், தனுஷின் அடித்த படமான கர்ணன் படம் திரைக்கு வந்திருக்கிறது. அது குறித்து பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், ‘’அசுரன்- படம் பார்த்துவிட்டு ஸ்டாலின் சொன்ன கருத்தால்தான் முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் அதற்கு மூல பத்திரம் இல்லை என்கிற உண்மை வெளிவந்தது. அதேபோல் கர்ணன் படத்தையும் பார்த்து ஸ்டாலின் கருத்து சொன்னால் வேறு ஏதேனும் உண்மைகள் வெளிவந்து சமூகத்திற்கு பேருதவியாக இருக்கும்’’என்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More