செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்.. ஷாக்கான ராம் சரண்

சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்.. ஷாக்கான ராம் சரண்

1 minutes read

தெலுங்கில் திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரணுக்கு ரசிகர் ஒருவர் சர்ப்ரைஸ் கொடுத்து அவரை திகைப்படைய செய்துள்ளார்.

தெலுங்கில் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். 2007-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிறுத்தை படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். பல வெற்றி படங்களை கொடுத்த ராம்சரண் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படம் குளோபல் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ராம் சரண் ரசிகர்களில் ஒருவரான ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்ராஜ், 264 கிலோ மீட்டர் நடந்து சென்று ராம் சரணை சந்தித்துள்ளார். தனது வயலில் விளைந்த நெல் மணிகளை வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ராம் சரணின் கதாபாத்திரத்தை வரைந்து பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More