செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சூப்பரான கத்திரிக்காய் தம் பிரியாணி!

சூப்பரான கத்திரிக்காய் தம் பிரியாணி!

1 minutes read

தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 250 கிராம்,
வெங்காயம் – ஒன்று,
கத்திரிக்காய் – 3 (சுமாரான அளவு, கசப்பில்லாதது),
தக்காளி – 3,
மிளகாய்த்தூள் – ஒன்றே கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது – ஒரு டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி… மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
(அல்லது தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும் செய்யலாம்).

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்…

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும்.

இப்போது இதில் அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி, அதில் பாதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, பாத்திரத்தில் உள்ள கலவையில் கத்திரிக்காயை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.

சூப்பரான சூப்பரான கத்திரிக்காய் தம் பிரியாணி ரெடி.

நன்றி -மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More