செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மரணதேவன் | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

மரணதேவன் | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

0 minutes read

மரணதேவன் காலதேவன்
இயமன் என்றும் பெயருண்டு
அவன் பெயர் கேட்டாலே  மாந்தர்
அஞ்சி நடுங்கிடுவர்
ஐயோ என்பவள்
இயமனின் மனைவி

உயிரை எடுக்க
இயமன் வரும் போது
ஐயோ என்று
அவளை நோக்கி
அபயக்குரல்
கொடுப்பாரும் உண்டு

பிறந்தவர் யாவரும்
இறப்பது உறுதி
பிறக்கும் போதே
இறக்கும் திகதியும்
எழுதப்பட டிருக்கும்
என்பாரும் உண்டு

பிறந்த சிசுவும்
இறப்பது உண்டு
பாலகரும் மரணம்
அடைவதும் நடக்கும்
இளைஞர் யுவதிகள் கூடச்
சாவடைவதும்  உண்டு

வயது முதிர்ந்து
நடை தளர்ந்து
இறப்பர் முதியோர் பலர்
இடை நடுவில்
மாண்டு போபவர்
ஏராளம் உண்டு

நோயினால் உயிரிழந்தார்
விபத்தினால் சாவடைந்தார்
விசம் தீண்டி மாண்டு போனார்
யுத்தத்தில் உயிரிழந்தார்
சுனாமிக்கு இரையானார்
என்பதெல்லாம் சாட்டுகளே !

எங்கிருந்தோ வந்தோம்
எவரும் அறியார்
எங்கே போகப் போகிறோம்
யாரும்  அறியார்
ஆனால் இறப்பு
மட்டும் நிச்சயம்

வரும்போது இருந்ததை விட
பூமியை அழகாக விட்டுச் செல்வோம்
எல்லோருடனும் அன்பாகப்
பண்பாக பழகி மகிழ்வோம்
வரும் போது எதையும் கொண்டு வராத நாங்கள்
போகும் போது வெறும் கையுடன் போவோம்

– பத்மநாபன் மகாலிங்கம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More