செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நீர் | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

நீர் | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

1 minutes read

குளிர்ந்த நிலையில் தண்ணீர்
சூடு பண்ண அது வெந்நீர்
குடிக்கும் போது குடி நீர்

பாயும் போது ஆறு, அருவி
நிலையாய் நின்றால் ஏரி, குளம்
நன்னீரில் சில மீன்கள்

நன்னீர்த் தாவரங்கள் சில
பாம்புகளும் முதலைகளும்
இறால் வகைகளும் நன்னீரில் உண்டு

சமுத்திரம் கடலில் உப்பு நீர்
உப்பு நீர் மீன்களின் உருசியே தனி
உப்பு நீர் வத்தினால் உப்புக்கல்

உவர் நீர்த் தாவரங்கள் பல உண்டு
கடல் நீரிலும் பாம்பும் முதலையும் உண்டு
நீலத் திமிங்கிலம் கடலின் அரசன்

கடற்பாசி மட்டுமல்ல
ஆகாயத் தாமரையும் கடல் நீரில் மிதக்கும்
இராவணன் மீசை என்று ஒன்றும் இருக்கும்

சுறா இனங்கள் பல கடலில் நீந்தும்
பாலூட்டி இனங்கள் பல  வசிக்கும்
இறால் சிங்கறாலும் கடலின் சீவராசிகள்

கப்பல்கள   மிதப்பதும் கடலில் தான்
ரைற்றானிக் தாண்டதும் அதே கடலில்
கொலம்பஸின் பயணங்கள் கப்பல்கள் மீதே

நீர் திரவமாக இருக்கும்
பனிக்கட்டி திண்மம்
நீராவி வாயு வடிவில்

நீரின்றி அமையாது இவ்வுலகு
பூமிப் பந்தின் மூன்றிலிரண்டு நீர்
ஒரு பங்கு மட்டுமே நிலம்

விமானங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும்
கப்பல்களின் தேவைகள் குறையவில்லை
உல்லாசப் பயணங்கள் போவது குரூசில்

இயற்கையின் படைப்பில்
நீரே பிரதானம் அதனை மாசு படுத்தாதீர்கள்
உடலுக்கு உணவை விட நீரே மிக அவசியம்

 

– பத்மநாபன் மகாலிங்கம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More