செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இலண்டனில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு

இலண்டனில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு

1 minutes read

இலண்டன் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளது.

பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீடு லண்டன் ஈலிங் அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. (London Ealing Amman temple, 5, Chapel Rd, London W13 9AE, U.K)

எதிர்வரும் 26ம் திகதி அக்டோபர் 2024 சனிக்கிழமை மாலை 1600 முதல் 1830 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் தலைமையுரையை இங்கிலாந்து சைவ மன்றங்களின் காப்பாளர் திரு. திரு. சிவா தம்பு அவர்கள் வழங்குவார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை ஈழத்தின் மூத்த ஆவணக்காப்பாளர். திரு. பத்மநாப ஐயர், மற்றும் திரு. சி.கிருபாகரன், திரு. சண்முகதாசன் ஆகியோர் வழங்குவர்.

பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை திரு. திரு. பா. நடேசன் அவர்கள் நிகழ்த்துவார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை திரு. நா. சபேசன் அவர்கள் ஆற்றுவார்.

தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் நூலின் அறிமுகவுரையை டாக்டர்.வே. ரவிமோகன் அவர்கள் ஆற்றுவார். அத்துடன் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை திரு. கோவிலூர் செல்வராஜன் அவர்கள் ஆற்றுவார்.

அத்துடன் இந்நூல் வெளியீட்டில் ஈழத்து சிற்றிதழ்கள் பற்றிய சிறப்புரையை திருமதி. மாதவி சிவலீலன் அவர்கள் வழங்குவார்.

இலண்டன் மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More