செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பழகுதல் | துவாரகன்

பழகுதல் | துவாரகன்

0 minutes read

 

ஒரு மதியவேளைத் தளம்பலுடன்
நினைவு
தன் சேமிப்பை
கொஞ்சம் கொஞ்சமாக
நிறுத்திக் கொள்கிறது
படுக்கையிலிருந்து கதிரைக்கும்
கதிரையிலிருந்து படுக்கைக்கும்
உடல் பழகிக் கொள்கிறது

வருடங்களை எதிர்கொண்டு
விண்ணோடம் பறக்கிறது
இங்கு
நினைவுகள் பின்தள்ளப்படுகின்றன

கோயில் மணியோசை
காலையை எழுப்புகிறது
அணிஞ்சில் உதித்துவிட்ட
மென்பூக்கள் சிதறியிருக்கின்றன
கூட்டிலிருந்து விடுபட்ட கோழிகள்
கரகரத்தபடி
மேய்ச்சலுக்குச் செல்கின்றன
இது மிக நல்ல சூழல்
தடுமாற்றமில்லாது
வார்த்தைகள் தெறிக்கின்றன

கடந்து கொண்டிருக்கும்
வாழ்வின் வலியையும்
போலி முகமனிதரையும்
வேறுபடுத்தமுடியாத
வெள்ளந்திச் சிரிப்போடு
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஒரு முதிய குழந்தை.

ஏதோ ஒன்று
மனசைப்
பிசைந்து கொண்டிருக்கிறது.

துவாரகன்
092024

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More