செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பிரிவின் கருணை | கமல் ஆபரன்

பிரிவின் கருணை | கமல் ஆபரன்

0 minutes read

ஏன் இவ்வளவு கருணையோடிருக்கின்றன
என் தெய்வங்கள்
அகலை ஏற்றிவைத்தால்
அமர்ந்துவிடுகின்றன எதிரில்,
எப்போதும் நின்றுகொண்டிருக்கின்றன ~
நினைந்தால் வந்துவிடுகிற தொலைவில்!

தந்துவிட்டுத்தான் தனித்தும்விட்டன~
தொழுதுகொள்ள ஒருதிசையும்,
தொலைந்துகொள்ள ஒருவழியும்

தந்துவிட்டுத்தான் தனித்தும்விட்டன.

நினைந்தாலே நிறைந்துவிடுகிறது பிரிவு
அவ்வளவு போதும் தானே
அன்புக்கும்
அருளுக்கும்!

கமல் ஆபரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More