செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் கதிரவனும் நிலவவளும் | கவிதை | சுவாதி குணசேகரன்

கதிரவனும் நிலவவளும் | கவிதை | சுவாதி குணசேகரன்

0 minutes read

காலை கதிரவனும்

கண் சிமிட்டும் நிலவவளும்

காதல் கொண்டனவோ – அதன்

காரணமாய் அலைந்தனவோ….

காலை மாலையென

கதிரவனும் தான் அலைந்து

காதல் நிலவவளை

காணாமல் தான் நொந்து

தேடி தேடியே தினமும் வலம் வந்து

தேன்நிலவவளும் தேய்பிறையாய் தான் தேய்ந்து….

நிலவவளை காணாத கவலையிலே

மறைவானோ கதிரவனும் மாலையிலே

கதிரவனின் கதிர்களதன்
நினைவினிலே – குளிர்

காய்வாளோ நிலவவளும் இரவினிலே…..

 

நன்றி : சுவாதி குணசேகரன் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More