செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் அதிவேக மின்னலாய்ச் செல்கிறாய்! | கவிதை | வை.கே.ராஜூ

அதிவேக மின்னலாய்ச் செல்கிறாய்! | கவிதை | வை.கே.ராஜூ

0 minutes read

காற்றுப் போகாத இடைவெளியில்
உன் காதல் வந்து புகுந்தது,
கால் வைக்கும் இடமெல்லாம்
நிழல் வந்து படர்கின்றது.

பட்டமிடும் நூலொன்று
பாதிவெளி பிரிந்து
காற்றலை வழியே மனம்
அலை மோதித் துடிக்கின்றது.

அதி வேக மின்னலாய்
உன் முகம்
அரை நொடியில் மறைகின்றது.
அதை நினைத்து என் கண்கள்
கண்ணீரில் மிதற்கின்றது.

காலம் செய்த கோலமாய்
காதல் இரண்டாய் பிரிந்து
கல்லில் விழுந்த கண்ணாடியாய்
கன்னி மனம் சிதறியது.

திசை மாறிப் போனவனே..!
விசை கொண்டு வந்துவிடு.
கழுத்துக்கு விலங்கிட்டு
மனைவியாக ஏற்று விடு.

-வை.கே.ராஜூ-
நாவிதன்வெளி-2

 

நன்றி : tamilcnn.lk

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More