செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நாளுக்கொரு முகமூடிகள் | பா.உதயன்

நாளுக்கொரு முகமூடிகள் | பா.உதயன்

1 minutes read

வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி
எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய்
நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா
இவர்கள் பொல்லாத மனிதரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி
கோவில் என்றும் பள்ளி என்றும் கொக்கரித்து திரிவாரடா
பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா
கன வித்தைகளும் செய்வாரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள்
கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வாரடா
கண்ணை மூடிப் பால் குடிக்கும் கள்ளப் பூனை போல் தானடா
பின்பு வல்லவர் தான் என்பாரடா வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

பேருக்கும் புகளுக்குமாய் பொய்யான கதை பேசி
பெரும் தத்துவங்கள் சொல்வாரடா தம்மை தாமே புகழ்வாரடா
தம் உயரம் தெரியாரடா தங்கள் பிழை அறியாரடா
தாங்கள் மாற நினைக்காரடா மனிதா புரிஞ்சுக்கடா

ஞானம் கொண்ட புத்தனைப்போல் தாமும் என்று நினைப்பாரடா
தேடல் ஒன்றும் தெரியாரடா வெறும் வெற்றுப் பேச்சில் விண்ணரடா
நல்ல மனம் இல்லாமல் நாளும் பொழுதும் தொழுதாலும்
என்ன தான் கடவுள் செய்வார் கள்ள மனம் கொண்டோரை

பொய்யான முகங்களுடன் மெய்யான மனிதர் போலே
பேருக்கும் புகளுக்குமாய் அங்கீகாரம் தேடி அலைந்தே
அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா
அந்த கபடம் கொண்ட கள்ள நரி போல் தானடா

பாசம் கொண்ட மனிதரைப் போல் பொய் வேஷம் கொண்டு
பொய்க்கால் குதிரை கட்டி ஆளுக்கொரு கதை பேசும்
நாளுக்கொரு முகமூடிகள் அவர்கள் நாளுக்கொரு முகமூடிகள்
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா.

பா.உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More