செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மருள் விளையாட்டு | வசந்ததீபன்

மருள் விளையாட்டு | வசந்ததீபன்

1 minutes read

ஞானஸ்தானம் பெறுகிறார்கள்
தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம்
தரித்திரம் வாசற்படியில்
படுத்துக் கிடக்கிறது
நொய்யல் அரிசியை
கஞ்சி வைக்கிறாள் கிழவி
நீண்ட நாள் பட்டினி முடிவாகும்
நாயுக்கு கொஞ்சம்
ஊற்ற நினைத்தாள்
பூசணிக்கூடால் ஆன தம்பூரா
மீட்டி வருகிறான்
குறி சொல்லி பண்டாரம்
தெருக்களில் இரந்து பாடுகிறான்
தோளில் ஊசலிடும்
துணித்தொங்கலில்
காற்றுதான்நிரம்புகிறது
ஆட்டை உரிக்கிறார்கள்
தூரத்தில் கொட்டுச்சத்தம் கேட்கிறது
ஜனங்கள் சாப்பிட பறக்கிறார்கள்
பக்குவமற்ற அவனால் பிரச்சனை
பக்குவமான இவனால் குழப்பம்
அலைகள் ஓய்வதில்லை
பலாப்பழங்கள்
பழுத்துத் தொங்குகின்றன
மந்திகள் சுளையெடுத்துத் தின்கின்றன
சிதறும் கொட்டைகளை
அணில்கள் பொறுக்கின்றன
தாழப் பறக்கும் தைலான் குருவிகள்
புற்றுக்குள்ளிருந்து ஈசல்கள் வெளியேறுகின்றன
பிரம்புப் புதருக்குள் வலியோடு முட்டையிடும் ராஜநாகம்
நாணற் பூக்கள் சிரிக்கின்றன
நதி சுதியோடு பாடுகிறது
நண்டுகள்
கைவிரித்து கால்விரித்து ஆடுகின்றன
மர மல்லிகைகள் மணக்கின்றன
பால் ஒழுக குட்டியைத் தேடும்
மிளா மான்
மூங்கில் குருத்துக்களைத்
தின்னும் மரநாய்கள்
நெருப்பு மலர்ந்திருக்கிறது
முள் முருங்கைகள் சுடர்கின்றன
தேனெடுக்கின்றன தேனீக்கள்
சுழி காற்றால் காடுகள் இசைக்கின்றன
இலைகள் நர்த்தனமிடுகின்றன
பாறைப் புடவிலிருந்து
கதுவாலிகள் தலைநீட்டுகின்றன
மழைக் காடுகள் சிலிர்க்கின்றன
மஞ்சி மெல்ல மூடுகிறது
குளிர்ச்சுனை வாடையாய்
வாய் திறக்கிறது
பாவத்தைப் பிதுக்கித் தள்ளினாள்
தினமும் தன் சதையை நாய்களுக்கு தின்னக் கொடுப்பவள்
பிள்ளைகளாய் பெருகுகிறது கள்ளம்
அற்பத்தினுள் சுழல்கிறது தாய்மை.

வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More