செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இன்னிசை கவிதை

இன்னிசை கவிதை

0 minutes read

மீளாக் கனவொன்றில் மூழ்கி
எல்லையற்ற பயணத்தைத் தொடங்கிவிட்ட
நாடோடியென
நகர்கிறதொரு உயிர்ப்பு
அது பறக்கும் வானத்தில்
தனக்கே தனக்காக ஞானியாக மாறி போதனை செய்யும்
சிலநேரங்களில் அழும்
ஒரு சில முறை அபூர்வமாக சிரித்ததை சிலர் கண்டதும் உண்டு
இத்தனை சிரத்தையுடன் அது ஜீவித்திருக்க காரணம் ஏதேனும் இருக்கும் தானே!?
எத்தனை காதலோ!
எத்தனை தோல்வியோ!
எத்தனை ஏமாற்றமோ!
எத்தனை வலியோ!
ஆனாலும் கூட அதற்கென சுழல்கிறதொரு பூமி…!
நானே எனதாய் என்னுள் இல்லை.

இன்னிசை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More