செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நள்ளிரவில் அசையும் ஜன்னல் | சீனு ராமசாமி

நள்ளிரவில் அசையும் ஜன்னல் | சீனு ராமசாமி

1 minutes read

ஒரு உருத்தெரியாத
மக்கியப் பிரேதம் மலையடிவாரத்தில்
கிடக்குகிறது.

அது பெண்ணாக இருக்கலாம்.

அது
கொலை எனில்
இறந்தவளின் துயரம் மிகக் கொடியது
வஞ்சனையின் நீளப்பாம்புகள் கொத்தாக தீண்டியிருக்கலாம்.

முகமூடி அணிந்த
தடஅறிவு பெண்ணொருத்தி
தீய்ந்திருந்த சதையின் ஊடே வெளியேறும்
காட்டெறும்பின்
கண் கொண்டு ஆய்ந்தாள்.

பிரேதத்தின் வாய் பகுதியில் கட்டுகள் இல்லை
திறந்த நிலையில்
இருக்கிறது
பல் எழும்புகள்.

இறந்தவளின் அலறல்
காடு முழுக்க கேட்டிருக்க வேண்டும்.

காட்டு விலங்களின் இறைக்கு சதையும்
மருத்துவப்
பரிதோசனைக்கு
எழும்புகளும் கிடைக்க செய்யும்
தந்திரத்தின் பயங்கரம் அரங்கேறியிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகியிருக்கும்
தொடர்களை தொடர்ந்தது காணுங்கால்
பின்
தூக்கத்தின் கனவுத் திரையில்
அச்சங்கள் இவ்வகை சித்திரங்களாகின்றன.

நள்ளிரவில்
ஒரு டம்பளர் நீர் அருந்தியும்
அசையும் ஜன்னல்
கதவினை
ஒரு கணம் பார்க்காமல்
திரும்பத் தூங்க முடியவில்லை.

சீனு ராமசாமி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More