செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வசந்ததீபன் கவிதை

வசந்ததீபன் கவிதை

0 minutes read

சாத்தானின் உருவத்தை வரைகிறான்
ஓவியத்தின் கோடுகள்
தீப்பிடித்து எரிகின்றன
உதிரும் மலர்களின் கேவல்கள்
அம்புபட்டு குருதி சிந்தியபடி
றக்கைகளை உதறி உதறித் துள்ளும் பறவையின் கீச்சொலி
பிரளய ஓசை எழுப்பும் நதியின்
பேரிரைச்சல்
வானமும் பூமியும் இடத்தை மாற்றி
சுழன்று சுழன்று பிரபஞ்சத்தின் ஊடாக
பூவின் மகரந்தப் பீடமாகையில்
புராதன ஆயுதங்களோடு
பிரசன்னமாகிறார் கடவுள்
அப்பூவின் மத்தியில்
சாத்தானா? கடவுளா?
குழப்பத்தில் ஓவியன்
மயங்கிச் சரிகிறான்.

வசந்ததீபன் கவிதைகள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More