செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கடுக்காயின் மருத்துவ குணங்கள்

கடுக்காயின் மருத்துவ குணங்கள்

1 minutes read
  • கடுக்காய் உடலில் நன்கு பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
  • கடுக்காய் வாய், தொண்டை, இரைப்பை, குடல் ஆகிய இடங்களில் உள்ள ரணங்களை ஆற்றிடும் வல்லமை பெற்றது.
  • உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
  • தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
  • இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்.
  • பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும்.
  • கண்களை சுற்றியுண்டாகும் கருவளையத்தை போக்க கடுக்காய் சிறந்தது. கடுக்காய் பொடியை பன்னீரில் கலந்து கண்களை சுற்றி பூசவேண்டும்.
பயன்படுத்தும் முறை
  • நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர வேண்டும்.
  • இப்படி தொடர்ந்து உண்டு வந்தால் மேற்கூறிய 26 நோய்களில் இருந்தும் முற்றிலும் விடுபட்டு நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழலாம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More