செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பொது­ந­ல­வாய மாநாடு: மந்­தி­ரா­லோ­சனையில் மன்­மோகன், முண்டுகொடுக்கும் விக்னேஸ்வரன் பொது­ந­ல­வாய மாநாடு: மந்­தி­ரா­லோ­சனையில் மன்­மோகன், முண்டுகொடுக்கும் விக்னேஸ்வரன்

பொது­ந­ல­வாய மாநாடு: மந்­தி­ரா­லோ­சனையில் மன்­மோகன், முண்டுகொடுக்கும் விக்னேஸ்வரன் பொது­ந­ல­வாய மாநாடு: மந்­தி­ரா­லோ­சனையில் மன்­மோகன், முண்டுகொடுக்கும் விக்னேஸ்வரன்

1 minutes read

mahinda and manmohan HT

இலங்­கையில் நடை­பெறும் பொது­ந­ல­வாய மாநாட்டில் பங்­கேற்­பது குறித்து அர­சியல் ஆலோ­சகர்­க­ளுடன் பிர­தமர் மன்­மோகன் சிங் தீவிர ஆலோ­சனை நடத்தி வரு­கிறார் என்று ரி.என். செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்­கையில் நடை­பெறும் பொது­ந­ல­வாய மாநாட்டில் இந்­தியா பங்­கேற்கக் கூடாது என்று தமி­ழக அரசு மற்றும் தி.மு.க. உள்­ளிட்ட பல்­வேறு கட்­சிகள், அமைப்­புகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லையில் வட மாகாண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன், பொது­ந­ல­வாய மாநாட்டில் பங்­கேற்க வரு­மாறு பிர­தமர் மன்­மோகன் சிங்­குக்கு அழைப்பு விடுத்­துள்ளார். மாநாட்டில் பங்­கேற்­பதன் மூலம் தமிழர் நல­னுக்­கான நட­வ­டிக்­கை­களை இந்­தியா தொடர முடியும் என்று விக்­னேஸ்­வரன் கூறி­யுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. வடமாகான முதலமைச்சரின் இந்த நடவடிக்கையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு செல்லும் பிரிட்டன் பிர­தமர் கமரூன், யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது. அவ­ரைப்­போல மன்­மோகன் சிங்கும் யாழ்ப்­பா­ணத்தில் பயணம் மேற்­கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே மாநாட்டை இந்­தியா புறக்­க­ணித்தால் சீனா, பாகிஸ்தான் உட­னான நட்பை இலங்கை மேலும் வலுப்­ப­டுத்­திக்­கொள்ளும் என்று கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லை­யில்தான் இலங்­கையில் நடை­பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசகர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இணையத்தளங்களில் அண்மையில் பரவலாக உலாவரும் மேலுள்ள கேலிச்சித்திரம் பல வினாக்களுக்கு விடைதருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More