4
தென்மேற்கு சீனாவிலுள்ள சொங்கிங் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை கொண்டாடும் முகமாக 30 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
தேவதைக் கதைகளில் வருவது போன்று வெண்பனியால் மூடப்பட்ட வயலில் கூடிய இந்த ஜோடிகள் ஒரே சமயத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
திருமணம் நிறைவு பெற்றதும் அந்த ஜோடிகள் ஒரே சமயத்தில் வர்ண பலூன்களை பறக்கவிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.