செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் விடுதலை | தமிழக அரசு அறிவிப்புமுருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் விடுதலை | தமிழக அரசு அறிவிப்பு

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் விடுதலை | தமிழக அரசு அறிவிப்புமுருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் விடுதலை | தமிழக அரசு அறிவிப்பு

1 minutes read

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரோபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை இரத்து செய்து செவ்வாய்க் கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110 இன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரோபர்ட் பயஸ், ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More