செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 90-வது வயதில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் காலமானார்

90-வது வயதில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் காலமானார்

1 minutes read

 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் தன் 90-வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

ஜோகன்னஸ்பர்க்கிலுள்ள அவரது இல்லத்தில், தூங்கிக் கொண்டிருந்த போது கார்டிமர் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கார்டிமர் 1991-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கவுரவிக் கப்பட்டார். கார்டிமர் 15 புதினங்களையும், ஏராளமான சிறுகதைகள், புனைவுகளற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன.

இனவெறிக்கு எதிரான போராளி

தென் ஆப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவை சார்ந்தே அவர் அதிகம் எழுதினார். 1980-ம் ஆண்டுகளில் இனவெறிக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவாக அவர் எழுதினார்.

நாடின் கார்டிமரின் இறுதிச் சடங்கு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More