செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இதுவரை நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்இதுவரை நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

இதுவரை நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்இதுவரை நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

1 minutes read

இதுவரை நோபல் பரிசு வென்றுள்ள இந்தியர்கள் யார் யார் என்ற விவரம் வருமாறு:

மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913ல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்கு கிடைத்த முதல் நோபல் பரிசு. தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930ம் ஆண்டில் அளிக்கப்பட்டது. அல்பேனியாவில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1979ல் வழங்கப்பட்டது. அம்ர்தியா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998ம் ஆண்டு வழங்கப்பட்டது. கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவ துறைக்கான நோபல் ப ரிசு 1968ல் வழங்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983ல் பெற்றார்.

இந்தியாவில் பிறந்து பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். இந்தியாவில் பிறந்து பிரிவினைக்கு பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து பிரிவினைக்கு பின் முதல் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுஸூக்கு 2006ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவி்ல் பிறந்த பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராஸூக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 1902ல் வழங்கப்பட்டது.

அதே போல் இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907ல் பெற்றார். திபெத்தை சேர்ந்த புத்த மத தலைவரான தலாய்லாமா இந்தியாவில் கடந்த 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More