செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா மீண்டும் அரசியல் பிரவேசம் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா மீண்டும் அரசியல் பிரவேசம்

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா மீண்டும் அரசியல் பிரவேசம் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா மீண்டும் அரசியல் பிரவேசம்

1 minutes read

9 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா மீண்டும் அரசியல் பிரவேசம் செய்கிறார்.

இலங்கையில் தொடர்ந்து 2 தடவை அதிபர் பதவி வகுத்தவர் சந்திரிகா பண்டாநாயகா குமாரதுங்கே. இவர் தனது அதிபர் பதவி முடிந்ததும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்கினார். அவரை தொடர்ந்து சந்திரிகா குமராதுங்கேவின் இலங்கை சுதந்திர கட்சி சார்பில் புகுந்த ராஜபக்சே அதிபரானார். இவரும் 2–வது தடவை அதிபராக உள்ளார். இவரது பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன.

ஆனால், அவரது செல்வாக்கு சரிந்து வருவதால் முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்துகிறார். அங்கு வருகிற ஜனவரி 8–ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரிகா குமாரதுங்கே மீண்டும் அரசியலுக்கு வருகிறார். இந்த தகவலை நேற்று அவரே தெரிவித்தார்.

நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளராக மைத்ரிபாலா ஸ்ரீசேனாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ளன. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் மந்திரி பதவி வகித்து தற்போது வெளியேறியுள்ளார்.

வரும் தேர்தலில் சந்திரிகா போட்டியிடவில்லை. ஆனால் பொது வேட்பாளரான மைத்ரி பாலா ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் சந்திரிகா கூறியதாவது:–

9 ஆண்டுகளுக்கு பிறகு எனது மவுனத்தை கலைக்கிறேன். ராஜபக்சே எனது கட்சியை அழித்து வருகிறார். அதை காக்கவே நான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன். எனது இந்த முடிவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசியலுக்கு சென்றால் ராஜபக்சே உங்களை கொன்று விடுவார் என எனது மகன் கூறினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More