செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலைஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலை

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலைஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலை

1 minutes read

ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரத்தில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

கொல்லப்பட்ட அனைவரும் 18 மாதம் முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் ஆவர். மேலும் இதில் 7 குழந்தைகளின் தாயான 30 வயது பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர படுகொலையை நிகழ்த்தியவர்கள் யார் என்பது குறித்து ஆஸ்திரேலிய போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை சிட்னியில் பயங்கரவாதி ஒருவன், உணவத்தில் உள்ள மக்களை பணையக் கைதியாக பிடித்துவைத்தான். பின்னர் போலீஸாரின் அதிரடி வேட்டையில் அவனை போலீஸார் கொன்றனர். இந்த சம்பவம் நிகழ்ந்து  ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 8 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பர்ட் அனைத்து பெற்றோர்களும் வெறுக்கத்தக்க இந்த சம்பவத்தால் சோகத்தில் உள்ளனர். இந்த குற்ற சம்பவத்தை வார்த்தையால் விமர்சிக்க முடியாது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More