வவுனியா கனகராயன்குளத்தில் இம் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற கொலை தொடர்பில் சந்தேகத்தின் பொரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி கனகராயன்குளத்தில் உள்ள வீடொன்றில் வவுனியா மகாறம்பைக்குளத்தை சேர்ந்த குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
அடிகாயங்கள் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இச் சடலம் கனகராயன்குளத்தில் வீடொன்றை கட்டிவரும் மேசனின் உடையது என அடையாளம் காணப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மெற்கொண்டு வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரிடம் பணியாற்றியவர் என சந்தேகிக்கப்படும் வவுனியா சாந்தசோலையை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.