செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிழக்கின் ஆட்சியையும் 20-01-2015 இல் கூட்டமைப்பு கைப்பற்றுமா?கிழக்கின் ஆட்சியையும் 20-01-2015 இல் கூட்டமைப்பு கைப்பற்றுமா?

கிழக்கின் ஆட்சியையும் 20-01-2015 இல் கூட்டமைப்பு கைப்பற்றுமா?கிழக்கின் ஆட்சியையும் 20-01-2015 இல் கூட்டமைப்பு கைப்பற்றுமா?

1 minutes read

கிழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் எனஎதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்குமாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைவகிக்கும்.

மேலும், அமையவுள்ள கூட்டணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேபெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் முதலமைச்சர் பதவியைத் தன் வசம்வைத்துக்கொள்ள தலைமை விரும்புகிறது. எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக இரா.சம்பந்தன்தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஹக்கீம் தலைமையிலானஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரும்  சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷதலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிஉடைவுற்றது. இதனால் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சிநடத்திய கிழக்கு மாகாணத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல்உருவாகியிருக்கிறது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் தற்சமயம் எதிர்க்கட்சி வரிசையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 11, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இக்கட்சியில்அதவுல்லா கட்சியின் உறுப்பினர் அண்மையில் இணைந்து கொண்டமையால்தற்போது 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்களுடன்இப்போது ஐ.ம.சு.கட்சியில் இருந்து இணைந்த உறுப்பினரையும் சேர்த்து 5உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிஸின் 3 உறுப்பினர்களுமாக 27 பேர்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More