செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உயிருடன் எரித்து கொலை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உயிருடன் எரித்து கொலை

ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உயிருடன் எரித்து கொலை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உயிருடன் எரித்து கொலை

0 minutes read

ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர். தாங்கள் கைது செய்யும் மைனாரிட்டி மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஈவு இரக்கமின்றி தலைதுண்டித்தும், உயிருடன் எரித்தும், கொலை செய்கின்றனர்.

அன்பர் மாகாணத்தில் அல்–பக்தாதி உள்ளிட்ட பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அயின் அல் – ஆசாத் விமான படை தளத்தை சுற்றியுள்ள நகரங்களை கடந்த வாரம் கைப்பற்றினர்.

இந்த நிலையில் அல் – பக்தாதி நகரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர். அவர்களில் போலீசாரும், ராணுவ வீரர்களும் அடங்குவர்.

இந்த தகவலை அல்–பக்தாதி நகர போலீஸ் தலைமை அதிகாரி குவாசிம் அல் – ஒபீடி தெரிவித்துள்ளார். எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More