செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் புற்றுநோயால் மரணம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் புற்றுநோயால் மரணம்!

1 minutes read
உலகின்  முன்னணி தகவல் தொழிலநுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக  நேற்று  உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பிறந்த பால் ஆலன் 14 வயதில் லேக்சைட் பாடசாலையில் படிக்கும் போது பில்கேட்ஸை  சந்தித்தார்.
இருவரும் இணைந்து 1975 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழிலநுட்ப வல்லுனராக 1983 வரை இருந்த இவரை, 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது.
இருப்பினும் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டதால் , தன்னுடைய  வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றதுடன்,  தான் சம்பாதித்த  பணத்தை  கொண்டு  உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்து வந்தார்.
ஆபிரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இவர் வழங்கியுள்ளார். “இதய மேன்” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு  விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More