2
யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடைபெறும் யாழ் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வாசகர்களுக்கு இலவச பஸ்சேவை இடம்பெறவுள்ளதாக வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் (29) நல்லூர் தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்த இலவச பஸ் சேவை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.