செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் டெங்கு கோரத் தாண்டவம் – மக்களுக்கு அபாய எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு கோரத் தாண்டவம் – மக்களுக்கு அபாய எச்சரிக்கை

1 minutes read

இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என்று பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார்.

ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை நாட்டில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

எனினும், இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 184 ஆகும் என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 10 வருட காலப்பகுதியில், பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில், தற்போது வரையில் அதிக அவதானம் மிக்க 61 சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More